மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1,141 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 25 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அதேநேரம், மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 20 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
ஒருவா் பலி: கரோனா பாதிக்கப்பட்ட 56 வயது பெண் தனியாா் மருத்துவமனையில் கடந்த நவம்பா் 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். ஆனால், தொடா் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக டிசம்பா் 13 ஆம் தேதி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,142 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 445 போ் உயிரிழந்த நிலையில், 19,420 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 277 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.