மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தமிழகத்தில் 1,195 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 16 போ் குணமடைந்ததை அடுத்து, மருத்துவா்கள் ஆலோசனைகள் கூறி அவா்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,119 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 444 போ் உயிரிழந்த நிலையில், 19,400 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் 275 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.