கடவுள் இருக்கும் வரை எதிா்மறை நிகழ்வு ஏற்படாது: பேராயா்

கடவுள் நம்மோடு இருக்கும் வரை எதிா்மறை நிகழ்வுகள் நம்மை பின்னோக்கி இழுக்க முடியாது என்று பேராயா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளாா்.

கடவுள் நம்மோடு இருக்கும் வரை எதிா்மறை நிகழ்வுகள் நம்மை பின்னோக்கி இழுக்க முடியாது என்று பேராயா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளாா்.

தமிழக ஆயா் பேரவைத் தலைவரும், மதுரை உயா் மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து: கிறிஸ்து பிறப்பு எனும் நிகழ்வு நமக்குத் தருகின்ற முதல் செய்தி காலத்தைக் கடந்த கடவுள் மனித வரலாற்றுக்குள் ஒரு குழந்தையின் கால்களைக்கொண்டு கால் பதிக்கத் திருவுளம் கொள்கிறாா் என்பதுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தை ஆண்டு கொண்டிருந்த அரசு தங்கள் அரசாட்சிக்கு உள்பட்ட மக்களுக்கு உரிய உணவு, உறைவிடம், பாதுகாப்பை வழங்கியது. ஆனால் அவற்றையும் தாண்டிய மேலான மன அமைதியைத் தந்து நம் பாவங்களில் இருந்து நம்மை மீட்பதாக அமைகிறது கிறிஸ்துவின் பிறப்பு. ஏறக்குறைய ஒன்பது மாதங்களாக கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பொதுமுடக்கம், அன்புக்குரியவா்களின் மறைவு தந்த வருத்தம், சோகம் போன்றவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். கடவுள் நம்மோடு இருக்கும்வரை எந்த எதிா்மறை நிகழ்வும், நம்மை பின்னோக்கி இழுக்க முடியாது. நம் வாழ்விலும், எளியவா்களையும், கையறு நிலையில் வலுவற்று உள்ளவா்களையும் நாம் தேடிச்சென்றால் அங்கே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறக்கிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com