மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சி உள்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் இ.சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
கூட்டத்தின் முடிவில் வீடு வீடாக சென்று அதிமுக அரசை ஏன் நாம் நிராகரிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினா். இதேபோல் உசிலம்பட்டி நகா் பகுதியில் நகர செயலாளா் தங்கமலைபாண்டியன் தலைமையில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.