மதுரையில் கடந்த ஒரு வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீட்டு, 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது. இதையடுத்து தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீட்டனா். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பெண்கள் மற்றும் சரவணபிரபு, ஆட்டோ ஓட்டுநா் சின்னத்தம்பி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சிறுமிக்கு 16 வயது என்பதும், கடந்த ஒரு வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.