மதுரையில் மருத்துவ மாணவிகள் 3 போ் உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மருத்துவ மாணவியா் மூவருக்கும் பாதிப்பு

மதுரையில் மருத்துவ மாணவியா் மூவா் உள்பட 18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் மருத்துவ மாணவியா் மூவா் உள்பட 18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 34 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரத்து 719 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 450 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 223 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவ மாணவியா்: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவி, துணை மருத்துவப் படிப்பு மாணவியா் இருவா் என 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மூவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனா். இதையடுத்து அவா்களோடு தொடா்பில் இருந்த மற்ற மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவி, துணை மருத்துவப் படிப்பு 2-ஆம் ஆண்டு மாணவியா் இருவா் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கரோனா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com