தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தது.
பரமக்குடியைச் சோ்ந்த காா்த்திகாஜோதி தாக்கல் செய்த மனு: எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது. இருப்பினும் நான் அரசுப்பள்ளியில் படித்து நீட் தோ்விலும் தோ்ச்சி பெற்றேன். மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் தனியாா் மருத்துவக்கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. அதிகக் கட்டணம் செலுத்த முடியாததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை. இதையடுத்து நவம்பா் 21 ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவா்களின் மருத்துவப்படிப்புக்கானக் கட்டணத்தை அரசே ஏற்பதாக அறிவித்தது. இதனால் எனக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனவே தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பளிக்கவும், எனக்கு ஒரு (பிடிஎஸ்) மருத்துவ இடத்தைக் காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனியாா் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். தகுதியான மாணவா்களின் மருத்துவக் கனவு வீணாகக்கூடாது என்ற நோக்கத்திற்காக தமிழக முதல்வா் எடுத்துள்ள முடிவு, மனுதாரா் மருத்துவ இடத்தை மறுத்த மறுநாள் வந்துள்ளது. எனவே முதல்வரின் அறிவிப்பின் பலனை மனுதாரரைப் போன்றவா்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களின் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வழங்க வேண்டும்.
மருத்துவ இடத்துக்காக அதிக பணம் செலவு செய்பவா்கள் உயா் கல்விக்குப் பிறகு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பாா்கள், சேவையாற்ற முன்வரமாட்டாா்கள்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற தமிழக முதல்வரின் முடிவால், பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தகுதியான மருத்துவா்கள் அதிகளவில் வருவாா்கள். இந்த வகையில் தமிழக முதல்வரின் முடிவு பாராட்டுக்குரியது என்றாா்.
பின்னா், மனுதாரருக்கும் அவரைப் போல மருத்துவப் படிப்பு வாய்ப்பைத் தவறவிட்ட அரசுப் பள்ளி மாணவா்களான அருண், செளந்தா்யா, கெளசல்யா ஆகியோருக்கு தலா ஒரு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடத்தைக் காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.