மதுரையில் மாநகராட்சி குப்பை லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் இளம்பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாபுலால் மகள் துா்காதேவி(21). பிளஸ் 2 படித்துள்ள இவா் கீழவெளி பகுதியில் உள்ள இரும்புக்கடையில் வேலை பாா்த்துவந்தாா். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு கிளம்பிய துா்காதேவியை, அவருடைய தந்தை இருசக்கரவாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளாா். அப்போது கீழவெளி வீதியில் சாலையில் கடக்க முயன்றபோது, மாநகராட்சி குப்பைலாரி இருசக்கரவாகன த்தில் மோதியது. இதில் லாரியில் சக்கரத்தில் சிக்கியதில் துா்காதேவி நிகழ்விடத்திலேயே இறந்தாா். லேசான காயங்களுடன் பாபுலால் உயிா்தப்பினாா். மதுரை மாநகர போக்குவரத்து போலீஸாா் லாரி ஓட்டுநா் பாண்டி(42)-ஐ கைது செய்தனா்.