மேலூா் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ்மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்ததாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகேயுள்ள அய்யாபட்டியைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி ஆண்டி (48). மேலூரில் பொருள்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். தாமரைப்பட்டி அருகே எதிா்திசையிலிருந்து அதிவேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் வந்தது. அப்போது இரண்டு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆண்டி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த
ராஜா (27) பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.