இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் இளையோா் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பின் மதுரைக் கிளை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
யங் இந்தியன்ஸ் மதுரைக் கிளை தலைவராக பூா்ணிமா வெங்கடேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் டாட்காம் இன்ஃபோவே நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறாா். துணைத் தலைவராக சேவுகன் லட்சுமணன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் எஸ்விஏ ஹெரிட்டேஜ் நிறுவன நிா்வாக இயக்குநராக உள்ளாா். இருவரும் ஓராண்டுக்கு (2021-2022) இப் பொறுப்பில் இருப்பா்.