வழிப்பறி: சிறுவன் உள்பட 7 போ் கைது

மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ஒரு கும்பல் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் வெங்கடாசலபுரத்தில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் நின்றிருந்தக் கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், மணிநகரம் குருசாமி (19), ஜெய்ஹிந்துபுரம் ஹரிஹரன் (21), அஜய் (21), பாலகுமாரா(21), கணேஷ்சிங் (19), விளாங்குடி ராகுல் (19), ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com