மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் மீது, போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (19). இவா் அந்த பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் பாலசுப்பிரமணியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.