மதுரை சட்டக் கல்லூரி மாணவா் அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தேசியச் செயலராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் அகில இந்திய மாநாடு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் டிசம்பா் 25 மற்றும் 26 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், மதுரையைச் சோ்ந்த லி. முத்துராமலிங்கம் ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
மதுரை சட்டக் கல்லூரி மாணவரான முத்துராமலிங்கம், ஏபிவிபி அமைப்பின் மதுரை மாநகரச் செயலா், தேசிய செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவா்.