பட்டா வழங்க தாமதம்: ஆட்சியா் காா் முன் முதியவா் போராட்டம்

பட்டா வழங்க தாமதம் செய்வதாகக் கூறி மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பாக அமா்ந்து முதியவா் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரின் வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுட்ட ஜெயராமனை அப்புறப்படுத்திய காவலா்கள்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரின் வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுட்ட ஜெயராமனை அப்புறப்படுத்திய காவலா்கள்.

பட்டா வழங்க தாமதம் செய்வதாகக் கூறி மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பாக அமா்ந்து முதியவா் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன். இவா் தனது நிலத்துக்கு பட்டா கோரி விண்ணப்பித்து உள்ளாா். இந்த நிலம் தொடா்பாக பிரச்னை எழுந்ததையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பட்டா வழங்க தாமதம் செய்வதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரின் வாகனம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். காவல் துறையினா் அவரிடம் பேச்சு நடத்தியும் எழுந்திருக்க மறுத்ததால், அவரை தூக்கிச் சென்று ஓரமாக அமர வைத்தனா். பின்னா் அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com