மதுரை மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் சிகிச்சையிலிருந்த 29 போ் குணமடைந்தனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 80 வயது முதியவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் இதுவரை 20,497 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 452 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 19,859 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 186 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.