தைப்பூசத் திருவிழா: பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் காலை 11.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் இரவு 10.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வரும்.

கோயம்புத்தூா் - பழனி பயணிகள் சிறப்பு ரயில் கோயம்புத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2 முதல் 12 ஆம் தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் முதல் 12 ஆம் தேதி வரை பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com