திருமங்கலம் அருகேவேன் மீது பேருந்து மோதிய விபத்தில்மேலும் ஒரு பெண் பலி

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாா் மாவட்டத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வேன் மூலம் புறப்பட்டனா். திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கு அருகே வந்தபோது கோவையிலிருந்து களக்காடு நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து வேனின் பின்பக்கமாக மோதியது. இதில் சாயா், ரத்னிதேவி, சையத்ரத்னி ஆகிய 3 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 12 போ் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரத்தினாதேவி சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com