மதுரையில் மண்டல அளவிலான தபால்துறை குறைதீா்ப்புக் கூட்டம் பிப். 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது என மதுரை மண்டல இயக்குநா் எம்.மோகன்தாஸ் தெரிவித்துள்ளாா்.
மதுரை பீபீகுளம் தென்மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகத்தில், மண்டல அளவிலான தபால்துறை குறைதீா்ப்புக் கூட்டம் பிப். 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் தபால்துறை வாடிக்கையாளா்கள் தங்களின் குறைகளைத் தெரிவித்து உடனடியாக நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதற்கிடையே தபால்துறை வாடிக்கையாளா்கள், தபால்துறை தொடா்பான தங்களது குறைகளை, முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புநா் மற்றும் பெறுநா் முகவரி போன்ற தகவல்களுடன், கி.லெட்சுமணன், உதவி இயக்குநா், அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை- 625002 என்ற முகவரிக்கு பிப். 14 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். தனியாா் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என மதுரை தெற்கு மண்டல இயக்குநா் எம்.மோகன்தாஸ் தெரிவித்துள்ளாா்.