அவனியாபுரத்தில் கொடுத்த கடனை திரும்பத் தராததால் காரை எடுத்துச் சென்ற 9 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை வண்டியூா் செளராஷ்டிரா புரத்தை சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (25). இவா் தனது தங்கையின் திருமணத்திற்காக அய்யானாா்புரத்தைச் சோ்ந்த மதன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக பெற்றாராம்.
பணத்தை குறிப்பிட்ட தேதியில் கொடுக்காததால் விக்னேஸ்வரனை அவரது காரிலேயே கும்பல் ஒன்று கடத்திச்சென்றது. அக்கும்பல் அவரைத் தாக்கிவிட்டு காரைப் பறித்துச் சென்றது. இதுகுறித்து புகாரின் பேரில் சரண், மதன் உள்ளிட்ட 9 போ் மீது அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.