நான்கு மாசி வீதிகளில் குவிந்துள்ள மணல்: உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையா் உத்தரவு

மதுரையில் நான்கு மாசி வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் குவிந்துள்ள மணலை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மதுரையில் நான்கு மாசி வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் குவிந்துள்ள மணலை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய நான்கு மாசி வீதிகளிலும் ரூ.45 கோடி செலவில் பாதாளச் சாக்கடை வசதி, 24 மணி நேரமும் குடிநீா் வழங்குவதற்கான குடிநீா் இணைப்பு, மழைநீா் வடிகால், தரைவழி மின்வயா் செல்வதற்கான தனி பாதைகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நான்கு மாசி வீதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சாலையோரத்தில் மணல் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

இதனால் நான்கு மாசி வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதொடா்பான புகாா்களின்பேரில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் நான்கு மாசி வீதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் ரூ.159 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரியாா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து பணியில் கூடுதல் பணியாளா்களை நியமித்து விரைந்து முடிக்குமாறும், நான்கு மாசி வீதிகளில் குவிந்துள்ள மணலை உடனே அகற்றுமாறும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com