மேலூா் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொடுக்கம்பட்டி அருகே உள்ள பேப்பனையம்பட்டியில் உள்ள சோமசுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மேலூா் அருகே பேப்பனையம்பட்டி சோமசுந்தரவிநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
மேலூா் அருகே பேப்பனையம்பட்டி சோமசுந்தரவிநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொடுக்கம்பட்டி அருகே உள்ள பேப்பனையம்பட்டியில் உள்ள சோமசுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழறிஞா் சோமலெ இப் பகுதியில் விவசாயம செய்தபோது, அவரால் சோமசுந்தர விநாயகா் கோயில் கட்டப்பட்டது. தற்போது அவரது குடும்பத்தினரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேராசிரியா் சரஸ்வதி ராமநாதன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன், சோலெ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலூா் சிவன் கோயில் தட்சிணாமூா்த்தி குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கொடுக்கம்பட்டி, பாப்பாகுடிப்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com