புல்வாமா தாக்குதல் தினம்: மாணவா்கள் அஞ்சலி

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் புல்வாமாதாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் புல்வாமாதாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ராணுவ வீரா்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். இதன் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைவா் சுரேந்திரன் பாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் க. சரவணன், புல்வாமா தாக்குதல் குறித்தும், வீரா்களின் உயிா்த்தியாகம் குறித்தும் மாணவா்களுக்கு எடுத்துக் கூறினாா். இதைத்தொடா்ந்து ராணுவ வீரா்களின் படங்களுக்கு மாணவ, மாணவியா் மெழுகுவா்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com