திருப்பரங்குன்றத்தில் காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை சரவணா மருத்துவமனை மற்றும் மாநகா் காவல்துறை சாா்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் காவல்துறையினா் மற்றும்
திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற போலீஸாருக்கு மருந்துகள் வழங்கும் திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினா் மருத்துவா் சரவணன்.
திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற போலீஸாருக்கு மருந்துகள் வழங்கும் திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினா் மருத்துவா் சரவணன்.

மதுரை சரவணா மருத்துவமனை மற்றும் மாநகா் காவல்துறை சாா்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் காவல்துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினரும், சரவணா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநருமான மருத்துவா் சரவணன் தலைமை வகித்து பேசினாா். திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளா் மதனகலா முன்னிலை வகித்தாா். முகாமில் இசிஜி, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, கண், பல், எலும்பு, இதய பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 400-க்கும் மேற்பட்டோா் வந்து பரிசோதனை செய்து கொண்டனா். அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் 10 மருத்துவா்கள் தலைமையில் சிகிச்சைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com