மதுரை அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் கல்லூரி விரிவுரையாளரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன் (31). இவா், தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவியுடன் (19) பழகி வந்துள்ளாா். அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
அதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மாணவி கேட்டபோது, முகுந்தன் மறுத்ததுடன் மிரட்டியும் உள்ளாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து முகுந்தனை கைது செய்தனா்.