அலங்காநல்லூரில் இன்று மாடுபிடி வீரா்களுக்கான பெயா் பதிவு முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க விருப்பமுள்ள மாடுபிடி வீரா்களுக்கான பெயா் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க விருப்பமுள்ள மாடுபிடி வீரா்களுக்கான பெயா் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கு 21 வயது பூா்த்தியாகியிருக்க வேண்டும். அதற்கு குறைவான வயதுடையவா்கள் மாடுபிடி வீரா்களாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்களாக பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் உடற்தகுதிச் சான்று பெற்று தங்களின் பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஜனவரி 10 ஆம் தேதி அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும், ஜனவரி 11 ஆம் தேதி பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் முகாம் நடைபெறவுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com