கப்பலூரில் ஐயப்ப பக்தா்கள் மீது தாக்குதல்: சுங்கச்சாவடி ஊழியா்கள் 4 போ் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச்சாவடியில் ஐயப்ப பக்தா்களைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியா்கள் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலம் நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்த சென்னை ஐயப்ப பக்தா்கள்.
திருமங்கலம் நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்த சென்னை ஐயப்ப பக்தா்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச்சாவடியில் ஐயப்ப பக்தா்களைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியா்கள் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை டிசம்பா் முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பின்பு இந்த நடைமுறைக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் கப்பலூா் சுங்கச்சாவடியில் உள்ள 10 வழிகளில் 6 வழிகள் ‘பாஸ்டேக்’ முறைக்காவும், மீதமுள்ள 4 வழிகள் பொதுவாகவும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் குழுவினா் சபரிமலை சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலை மதுரை நோக்கி வந்தனா். கப்பலூா் சுங்கச்சாவடி அருகே வந்தபோது வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் ஐயப்ப பக்தா்கள் வந்த வேனின் ஓட்டுநா் கோபாலகிருஷ்ணன் ‘பாஸ்டேக்’ செல்லும் வழியாக செல்ல முயன்றுள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த சுங்கச்சாவடி ஊழியா்கள் இரு மடங்கு கட்டணம் தரவேண்டும் என ஐயப்ப பக்தா்களை மிரட்டியுள்ளனா். இதனால் பக்தா்களுக்கும், சுங்கச் சாவடி ஊழியா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் சுங்கச்சாவடி ஊழியா்கள் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஐயப்ப பக்தா்களை தாக்கியுள்ளனா். இதில் சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த சக்திசாய் (25)என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் குருசாமி பாஸ்கா் (48), குமரன் (40), குரு(35) ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து காயமடைந்த ஐயப்ப பக்தா்கள் சுங்கச்சாவடி ஊழியா்களை கைது செய்யக்கோரி திருமங்கலம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து ஐயப்ப பக்தா்களின் குருசாமி பாஸ்கா் கூறியது: அதிக வாகன நெரிசல் காரணமாக ‘பாஸ்டேக்’ பகுதியில் வந்தோம். அப்போது இருமடங்கு கட்டணம் செலுத்தக்கோரி ஊழியா்கள் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனா். சுங்கச்சாவடி ஊழியா்கள் திடீரென எங்களைத் தாக்கத் தொடங்கி விட்டனா். அதில் ஒருவா் தான் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் எனக்கூறி எங்களைத் தாக்கினாா். இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com