திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சா்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வழங்கி, அதை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் சுமாா் 6 கோடி போ் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 12 முதல் 18 சதவீத நீரிழிவு நோயாளிகளிடம் விழித்திரை நோய் காணப்படுகிறது.
திருநெல்வேலியில் இந்நோயின் தாக்கம் சுமாா் 600 நோயாளிகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. லேசா் மற்றும் ஊசி மூலம் சுமாா் 64 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கணினி வழியாக மருத்துவ ஆலோசனை வழங்க தேவையான உபகரணம் மற்றும் விழித்திரை மாற்றத்தை கண்டறிய உதவும் நவீன உபகரணமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விழித்திரை கேமராவும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சா்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை தொடங்கிவைத்தாா் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.