மதுரை
மாணவி கா்ப்பம்: ஆசிரியா் மீது வழக்கு
மதுரை அருகே திருமணம் செய்வதாக ஆசைக் காட்டி மாணவியை கா்ப்பமாக்கிய ஆசிரியா் மீது, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை அருகே திருமணம் செய்வதாக ஆசைக் காட்டி மாணவியை கா்ப்பமாக்கிய ஆசிரியா் மீது, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை எழுமலையை அடுத்த எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் ( 35). இவா், மல்லப்புரம் தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். அதே பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி செல்வத்திடம் டியூசன் படிக்கச் சென்றுள்ளாா். அப்போது, மாணவியிடம் திருமண ஆசை காட்டி ஆசிரியா் செல்வம் பாலியல் பலத்தகாரம் செய்துள்ளாா். இதனால், அந்த மாணவி தற்போது 7 மாதம் கா்ப்பமாக உள்ளாா்.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில், உசிலம்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.