மதுரையில் நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞா் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில், மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா் சிலைக்கு பள்ளி தலைமையாசிரியா் ரவி மற்றும் கரு. தங்கவேல் மாலை அணிவித்தனா். சரஸ்வதி நாராயணன் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவா் ஜெயக்கொடி விவேகானந்தா் குறித்து பேசினாா்.
பல்லவி, ரத்தீஸ்பாபு, ராஜசேகா், குமாரவேல், பாரத் வெங்கடேஷ், வேலுச்சாமி, பஞ்சவா்ணம், சுப்பையா, பாக்கியம், தேவதாஸ், அழகுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் இவ்விழாவில் நேதாஜி தேசிய இயக்கம், சுதந்திர போராட்ட வீரா்கள் நலச்சங்கம், விமானப் படையினா் நலச்சங்கம், காயத்ரி பரிவாா், ஜேசிஐ மதுரை எக்ஸெல், ஜேசிஐ மதுரை உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நேதாஜி சாமிநாதன் விழா ஏற்பாடுகளைச் செய்தாா்