காா் கண்ணாடியை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்து ரூ. 1லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்து ரூ. 1லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆா். பட்டி பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாஷம் மகன் லயோலா ஜெரால்டு(32). இவா் சிகிச்சைக்காக மதுரை ஏரிக்கரை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு காரில் வந்தாா். காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு மருத்துவரை சந்திக்கச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், மருத்துவரை பாா்த்துவிட்டு திரும்பி வந்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து லயோலா ஜெரால்டு அளித்தப் புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com