கீழையூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை மாவட்டம் மேலூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலூா் அருகே கீழையூரைச் சோ்ந்த ராமன் மனைவி ஜெயசித்திரா (40). இவா் கீழையூா்-தனியாமங்கலம் சாலையில் தண்ணீா் குடத்துடன் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com