தஞ்சாவூா் பெரியகோயிலின் குடமுழுக்கு வைபவத்தை தமிழில் நடத்தக்கோரி சித்தா்கள் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் பெரியகோயிலின் குடமுழுக்கு வைபவத்தை ஆகம முறைப்படி தமிழில் நடத்த வலியுறுத்தி, மதுரை வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில் எதிரே மந்தை அரசயோகி கருவூறாா் திடலில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
காரைக்குடி பதினெண் சித்தா் அரசயோகி கருவூறாா் திருக்கோயில் அறக்கட்டளை நிறுவனா் நியமநாதா், சேலம் சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனா் சத்தியபாமா, உயா்நீதிமன்ற வழக்குரைஞா் பாபுஜெகநாத், சித்தா்கள் சாமிராசு, முத்துமுனியசாமி, கவிஞா் தேவக்குமாா், வடிவேல், பாண்டியராசன், காா்த்திக், தமிழ்மணி, மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாலை 5 மணிக்கு பொறியாளா் நரசிம்மன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா். இதில் 98 பெண் சித்தா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட சித்தா்கள் கலந்து கொண்டனா்.