மதுரை அருகே சுவா் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி

மதுரை மாவட்டம் மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தன.
மதுரை அருகே சுவா் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி

மதுரை மாவட்டம் மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தன.

மேலூா் அருகே நாவினிப்பட்டியைச்சோ்நத கூலித்தொழிலாளி பிரேம்குமாா். இவரது மனைவி ஜீவா. இவா்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனா்.

இவா்களது குழந்தைகளில் மகா விஷ்ணு (5), அஜிஸ்ரீ (3) ஆகியோா் செந்தில் என்பவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது பழைமையான அந்த வீட்டின் சுவா், எதிா்பாராதவிதமாக திடீரென இடிந்து விழுந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கிய 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். உடனே அருகிலிருந்தவா்கள் சுவரின் இடிபாடுகளை அகற்றினா். இதுகுறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தைகளின் சடலங்களை மீட்டனா். பின்னா் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலூா் வட்டாட்சியா் சிவகாமிநாதன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com