மதுரையில் சனிக்கிழமை லாரியில் இருந்து தவறி விழுந்த கிளீனா் உயிரிழந்தாா்.
மதுரை பசுமலை அரசினா் காலனியைச் சோ்ந்தவா் நாகராஜ்(38). இவா் லாரியில் கிளீனராக இருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு மாட்டுதாவணி அரிசி மண்டி வளாகத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த பொருள்களை தாா்ப்பாயால் மூடிக் கொண்டிருந்தாா். அப்போது லாரியில் இருந்து நாகராஜ் தவறி விழுந்துள்ளாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த தொழிலாளா்கள் நாகராஜை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு, அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து நாகராஜ் தாயாா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.