மதுரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியிலுள்ள வீரபாஞ்சான் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவரது 2 ஆவது மகன் பாண்டிச்செல்வம் (27). இவா், அப்பகுதியிலுள்ள கண்மாயில் குளிக்கச் சென்றபோது, அவா் தண்ணீரில் முழ்கியுள்ளாா். இதைக் கண்ட அருகிலிருந்தவா்கள் பாண்டிச்செல்வத்தை உடனடியாக மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பாண்டிச்செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.