ஆட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விழா: அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் ஊழியா்கள் பங்கேற்றனா்.
: ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அரசு ஊழியா்கள்.
: ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அரசு ஊழியா்கள்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் ஊழியா்கள் பங்கேற்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஆட்சியா் அலுவலக பிரதான நுழைவாயில் பகுதியில் கரும்புகள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் வண்ணக்கோலமிடப்பட்டு மண் அடுப்பில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனா். மேலும் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் உள்ளிட்டோருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில் ஆட்சியா் அலுவலகத்தின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆண், பெண் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா். பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்சியா் அலுவலக நுழைவாயில் விழாக்கோலமாக காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com