ஜன. 17,18 இல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோட்டத்தில் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி பிரிவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி பிரிவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்தி: பாலக்காடு - திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில் (எண் 56769, 56770) ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் (எண் 56707) ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

கோயம்புத்தூா் - நாகா்கோவில் பயணிகள் ரயில் (எண் 56320) ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் நாகா்கோவில் ரயில் நிலையத்திற்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com