திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தையொட்டி ஜன.16 மற்றும் ஜன.26 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளாா்.
அன்றைய தினம் ‘டாஸ்மாக்’ சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள், நட்சத்திர விடுதிகள், மனமகிழ் மன்றங்களில் உள்ள மதுக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
இதை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.