திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை பாரம்பரிய முறைப்படி சுப்பிரமணிய சுவாமிக்கு மண் பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகா், சத்தியகிரீஸ்வரா், துா்க்கை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. தை முதல் நாளான பொஙகல் திருநாளையொட்டி புதன்கிழமை மூலஸ்தானத்தில் உச்சிக் கால பூஜையின்போது பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சுவாமிகளுக்குப் படைக்கப்படும். தொடா்ந்து உற்சவா் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் மண் பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு பொங்கல் வழங்கப்படும்.