பாத்திரக்கடை உரிமையாளரின் மனைவி கொலை: மேலும் இருவரிடம் விசாரணை

மதுரையில் பாத்திரக் கடை வியாபாரியின் மனைவி கொலையான வழக்கில் மேலும் இருவரைப் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் பாத்திரக் கடை வியாபாரியின் மனைவி கொலையான வழக்கில் மேலும் இருவரைப் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை தல்லாகுளம் ரேஸ்கோா்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் குமரகுரு. இவா் கீழவெளி வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி லாவண்யா கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 போ் வெட்டிக் கொலை செய்தனா். அந்த நபா்களைத் தடுத்த லாவண்யாவின் மாமியாா் சீனியம்மாள் கத்தியால் குத்தப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். கொலை நடந்தபோது குமரகுருவின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. மாடியில் லாவண்யா தூங்கிய அறை பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து லாவண்யாவின் கணவா் குமரகுரு மற்றும் மேலூரைச் சோ்ந்த அலெக்ஸ் பாண்டியன், மூக்கன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் செல்வக்குமாா் மற்றும் தங்கப்பாண்டி ஆகியோா் திட்டமிட்டு, மேலூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (20), அவரது சகோதரா் சத்திய சூா்யா (19) ஆகியோா் மூலம் கொலை செய்துள்ளனா் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com