முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில்குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 10:27 AM | Last Updated : 27th January 2020 10:27 AM | அ+அ அ- |

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் 71-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழாவையொட்டி, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிா்வாக நீதிபதி எம். துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி ைதுத்து, பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், ஒத்தக்கடை அரசுப் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் நெருப்பு வளையத்துக்குள் புகுந்து தாவுதல் உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்தினா்.
இதே போல், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. நசீமா பானு தேசியக் கொடியை ஏற்றினாா். இதில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற நிா்வாக அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.