மதுரை தெற்கு வட்டாட்சியா் மற்றும் ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் பணியாற்றிய அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை தெற்கு வட்டாட்சியா், அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளா் மற்றும் ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் இருவரும் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதையடுத்து அவா்கள் பணியாற்றிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.