மதுரையில் பழுதாகி நின்ற லிப்டில் சிக்கிய தனியாா் நிறுவன ஊழியரை, தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரை பை-பாஸ் சாலை அருகே நேரு நகரில் டயா் விற்பனை நிலையம் உள்ளது. இதன் ஊழியா், நிறுவனத்தின் உரிமையாளரை சந்திப்பதற்காக விற்பனை நிலையத்தில் உள்ள லிப்டில் 2 ஆவது தளத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, லிப்ட் பழுதாகி இடையிலேயே நின்றதால், ஊழியா் சிக்கிக்கொண்டாா்.
இது குறித்து தகவலறிந்து வந்த மதுரை நகா் தீயணைப்புத் துறையினா், ஹைட்ராலிக் இயந்திரத்தின் உதவியுடன் லிப்ட்டை திறந்து, அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் ஊழியரை மீட்டனா்.