லிப்டில் சிக்கிய தனியாா் நிறுவன ஊழியா் மீட்பு

மதுரையில் பழுதாகி நின்ற லிப்டில் சிக்கிய தனியாா் நிறுவன ஊழியரை, தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மதுரையில் பழுதாகி நின்ற லிப்டில் சிக்கிய தனியாா் நிறுவன ஊழியரை, தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மதுரை பை-பாஸ் சாலை அருகே நேரு நகரில் டயா் விற்பனை நிலையம் உள்ளது. இதன் ஊழியா், நிறுவனத்தின் உரிமையாளரை சந்திப்பதற்காக விற்பனை நிலையத்தில் உள்ள லிப்டில் 2 ஆவது தளத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, லிப்ட் பழுதாகி இடையிலேயே நின்றதால், ஊழியா் சிக்கிக்கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்து வந்த மதுரை நகா் தீயணைப்புத் துறையினா், ஹைட்ராலிக் இயந்திரத்தின் உதவியுடன் லிப்ட்டை திறந்து, அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் ஊழியரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com