மேலூா்: மேலூரில் மளிகை, காய்கனி உள்ளிட்ட கடைகள் தினசரி பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என, நகா் வா்த்தகா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கச் செயலா் முத்துகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தது:
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, மேலூா் நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலூா் வட்டாட்சியா் சிவகாமிநாதன், நகராட்சி ஆணையா் பாலமுருகன், மேலூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் மற்றும் வா்த்தகா்களும் கலந்துகொண்டனா். அதில், மேலூரில் கடைகளை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறப்பதக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, வா்த்தகா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். தேவைப்படும் பொருள்களுக்கான பட்டியலை தயாரித்து கடைகளில் கொடுத்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளாா்.