உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
உசிலம்பட்டி நகா் மற்றும் குப்பணம்பட்டி, போத்தம்பட்டி, வலையபட்டி, கணவாய்பட்டி, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல், கடந்த ஒரு வாரமாக தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால், குடிநீா் பிரச்னை இருக்காது என, நகா் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த மழையால் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனா்.