முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை ஊழியர்களுக்கு கரோனா
By DIN | Published On : 14th July 2020 01:14 PM | Last Updated : 14th July 2020 01:14 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.