மதுரை மாநகராட்சியில் ஜூலை 25-இல் குடிநீா் விநியோகம் இல்லை

மதுரை மாநகராட்சி வைகை குடிநீா் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை 25 ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி வைகை குடிநீா் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை 25 ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி வைகை குடிநீா் திட்ட பராமரிப்பு பணிகள் ஜூலை 25 ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் வைகை அணையிலிருந்து குடிநீா் கொண்டு வரும் 2 ஆம் வைகை குடிநீா் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்களை மாற்றி அமைத்து இரும்புக் குழாய்கள் பதித்து இணைக்கும் பணிகள் நடக்கவுள்ளது.

இதனால் வடகரைப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வாா்டு எண் 5 முதல் 9 வரை, 27 மற்றும் 33 முதல் 47 வரை, அதாவது அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூா், மீனாட்சிபுரம், குலமங்கலம் சாலை, கோரிப்பாளையம், ரேஸ்கோா்ஸ் காலனி, டிஆா்ஓ காலனி, பி அண்டு டி காலனி, பீ.பீ.குளம், நரிமேடு, புதூா், அண்ணாநகா், கே.கே.நகா், மதிச்சியம், கரும்பாலை தென்கரைப் பகுதியில் வாா்டு எண் 19, 28, 63, 64, 77 மற்றும் 88 முதல் 93 வரையில் உள்ள பகுதிகள், அதாவது ஹெச்.எம்.எஸ்.காலனி, விராட்டிபத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்த்புரம், டிவிஎஸ் நகா், முத்துப்பட்டி, அழகப்பன் நகா், கீரைத்துறை, வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. மேலும் அத்தியாவசியமானப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com