திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
ஹர்விபட்டி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு மன்ற தலைவர் ஜி.அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் எஸ்.அண்ணாமலை, மன்ற துணைத் தலைவர் ஜி.காளிதாசன், மன்ற செயலாளர் டி.குலசேகரன், எம். கணேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.துளசிதாஸ் ,கந்தராஜ் ,மீனாட்சிசுந்தரம் ,மகுடபதி, வெங்கடசாமி, அ.அரவிந்தன், பிச்சம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.