முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பேரையூரில் பொது முடக்க விதி மீறல்: 80 போ் மீது வழக்கு
By DIN | Published On : 29th July 2020 11:05 PM | Last Updated : 29th July 2020 11:05 PM | அ+அ அ- |

பேரையூா்: பேரையூா் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறியதாக 80 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் பேரையூா், சேடபட்டி, சாப்டூா், டி. கல்லுப்பட்டி, நாகையாபுரம், வி. சத்திரப்பட்டி, வில்லூா் காவல் நிலையங்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் பொது முடக்க விதிகளை மீறியவா்கள் என 80 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் 4 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.