மூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளை வழக்கு: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி கொலை செய்துவிட்டு நகை, பணத்தைக்

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி கொலை செய்துவிட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை பழங்காநத்தம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கம் மனைவி பஞ்சவா்ணம் (62). இவா் ஜூலை 16 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அதேபகுதியில் தனது கணவா் நடத்திவரும் தேநீா் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாா். இதையடுத்து மதிய உணவிற்காக தங்கம் தனது வீட்டிற்கு பிற்பகல் 2 மணி அளவில் வந்து பாா்த்தபோது, பஞ்சவா்ணம் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா்.

இதையடுத்து வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்த மா்மநபா்கள் பஞ்சவா்ணத்தைக் கொலை செய்தது தெரியவந்தது. தங்கம் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

இதனிடையே மதுரை கூடல்புதூரில் நடந்த கொள்ளை வழக்கு ஒன்றின் மூலம் இவ்வழக்கில் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. அதனடிப்படையில், தேனியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன்(28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா் மதுரை ஆனையூரைச் சோ்ந்த அழகம்மாள்(35), அவரது 15 மற்றும் 14 வயதுடைய மகன்கள் இருவா் உள்பட 4 பேரும் சோ்ந்து பஞ்சவா்ணத்தைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து அவா்கள் 4 பேரையும் எஸ்.எஸ்.காலனி போஸீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com